Home Tamilmanigal “ஆவ​ணக் காப்​ப​கத் தந்தை” பி.எஸ்.பாலிகா

“ஆவ​ணக் காப்​ப​கத் தந்தை” பி.எஸ்.பாலிகா

by Dr.K.Subashini
0 comment

"ஆவ​ணக் காப்​ப​கத் தந்தை" பி.எஸ்.பாலிகா

முது​மு​னை​வர் ம.சா.அறி​வு​டை​நம்பி

 

முதி​ய​வர் வேடத்​தில் இறை​வனே வந்து,​​ ஆவ​ணங்​க​ளைத் துணைக்​க​ழைத்​துத் தன் பக்​தர்​க​ளி​டத்​தில் பாசத்​தை​யும்,​​ பரி​வை​யும் காட்​டிய ​ வர​லாற்​றைச் ​(சுந்​த​ரர்)​ சேக்​கி​ழார் தம்​மு​டைய பெரி​ய​பு​ரா​ணக் காப்​பி​யத்​தில் கூறிச் சென்​றுள்​ளார்.​

 

தஞ்​சைப் பெரு​வு​டை​யார் கோயி​லில் இவ்​வ​ர​லாற்று நிகழ்வை அப்​ப​டியே கண்​ணில் காட்​டு​வது போன்று ஓவி​யம் வரை​யப்​பட்​டுள்​ளது.​

 

இதி​லி​ருந்து எந்​த​வொரு நிகழ்ச்​சி​யை​யும் மெய்ப்​பிப்​ப​தற்கு

  • ஆட்சி
  • ஆவ​ணம்
  • காட்சி

என்ற மூன்​றும் தேவைப்​ப​டு​வதை அறிந்​து​கொள்ள முடி​கி​றது.​

 

சீ​னப் பயணி யுவான் சுவாங் எழு​திய பய​ணக் குறிப்​பு​க​ளில்,​​ "நம் நாட்டு அர​சு​கள் பற்​றிய உண்​மை​களை ஆவ​ணங்​களி​லி​ருந்து தெரிந்து கொண்ட"தாகக் குறிப்​பி​டு​கி​றார்.​

 

இந்​திய நாட்​டைப் பொறுத்த அள​வில் இஸ்​லா​மிய ஆட்​சி​யா​ளர்​கள் ஆவ​ணக் காப்​ப​கங்​களை முதன் முதல் உரு​வாக்​கி​னர்.​

 

விஜய நகர ஆட்​சிக் காலத்​தில் "இராயல் ரெக்​கார்டு ஆபீஸ்" உரு​வாக்​கப்​பட்​டது.​

 

இதில்,

  • ஓலைச் சுவ​டி​கள்
  • செப்​புப் பட்​ட​யங்​கள்
  • இலைப் புத்​த​கங்​கள்
  • தாள் ஆவ​ணங்​கள்

தொகுக்​கப்​பட்​டுப் பாது​காக்​கப்​பட்​டன.​

 

பிரிட்​டிஷ் ஆட்​சிக் காலத்​தில் இந்​தி​யா​வின் முக்​கி​யத் தலை​ந​க​ரங்​க​ளான

  • மும்பை
  • சென்னை
  • கொல்​கத்தா

ஆகிய நக​ரங்​க​ளில் தொடங்​கப்​பட்ட ஆவ​ணக் காப்​ப​கங்​க​ளில் கடி​தப் போக்​கு​வ​ரத்​து​கள்,​​ அன்​றாட நிர்​வா​கக் குறிப்​பு​கள் போன்​றவை சேக​ரிக்​கப்​பட்​டன.​

 

கா​லத்​தால் முந்​தைய ஆவ​ணக் காப்​ப​க​மா​கச் சென்​னை​யி​லுள்ள ஆவ​ணக் காப்​ப​கம் திகழ்​கி​றது.​

"மத​ராஸ் ரெக்​கார்டு ஆபீஸ்" என்ற பெய​ரில் தொடங்​கப்​பட்ட இந்த ஆவ​ணக் காப்​ப​கம் எழும்​பூ​ரில் 1909 முதல் "ஆவ​ணக் காப்​ப​கம்"
( www.tanap.net/content/archives/archives.cfm?ArticleID=202 ) என்ற பெய​ரில் செயல்​பட்டு வரு​கி​றது.​

 

இதில் 1670ஆம் ஆண்டு முதல் உள்ள ஆவ​ணங்​கள் பாது​காக்​கப்​பட்டு வரு​கின்​றன.​

 

இங்​குள்ள பல்​வேறு ஆவ​ணங்​க​ளுள் கிழக்​கிந்​தி​யக் கம்​பெ​னி​யின் நிர்​வாக ஆவ​ணங்​களை "உல​கத்​தின் தலை​சி​றந்த வர​லாற்று மூலங்​கள்"  என்று கிராண்ட் துவ் ( Sir Mountstuart Grant Duff –  http://en.wikipedia.org/wiki/M._E._Grant_Duff ) என்​பார் குறிப்​பிட்​டுள்​ளார்.​

 

வ​சதி படைத்த நிலச்​சு​வான்​தார் குடும்​பப் பாரம்​ப​ரி​யத்​தில் "பந்​த​வல்" என்ற கிரா​மத்​தில் 1908ஆம் ஆண்டு நவம்​பர் 11ஆம் தேதி பிறந்​த​வர் பந்​த​வல் சுரேந்​தி​ர​நாத் பாலிகா.​

 

இ​வர் சென்​னைப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் படித்து பி.ஏ.,​​ பட்​டம் பெற்​றார்.​ தம்​மு​டைய 25ஆம் வய​தில் முனை​வர் பட்​டம் பெற்​றார்.​

 

21ஆம் வய​தில் இ​ராமா​பாய் என்ற பெண்​ணைத் திரு​ம​ணம் செய்​து​கொண்​டார்.​

 

  • இ​லண்​டன் பொது ஆவண அலு​வ​ல​கம்
  • இ​லாகூர் பஞ்​சாப் ஆவ​ணக் காப்​ப​கம்

ஆகி​ய​வற்​றில் ஆவ​ணங்​கள் பரா​ம​ரிப்​புத் தொடர்​பான பயிற்​சி​யைப் பெற்​றார்.​

 

கொங்​க​ணி​யைத் தாய்​மொ​ழி​யா​கக் கொண்ட இவர்,​​ தாம் படிக்​கும் காலத்​தில் பல்​வேறு பரி​சு​க​ளை​யும் விரு​து​க​ளை​யும் பெற்​றுள்​ளார்.​

 

சிறந்த வர​லாற்​றா​சி​ரி​ய​ரா​க​வும்,​​ படிப்​பா​ளி​யா​க​வும்,​​ சிந்​த​னை​யா​ள​ரா​க​வும்,​​ நேர்​மை​யான நிர்​வா​கி​யா​க​வும் திகழ்ந்த இவ​ரது பணி​க​ளைப் பாராட்டி அன்​றைய பிரிட்​டிஷ் அரசு இவ​ருக்கு "இராவ்​ப​க​தூர்" பட்​டத்தை அளித்​துச் சிறப்​பித்​தது.​

 

தம் பணிக்​கா​லத்​தில் விடுப்பு எடுத்​துக்​கொள்​ள​வில்லை.​ தம் தந்தை இறந்​த​போது 14 நாள்​கள் மட்​டுமே விடுப்​பில் சென்​றார்.​

 

ஏறத்​தாழ 40க்கும் மேற்​பட்ட கட்​டு​ரை​களை எழு​தி​யுள்​ளார்.​

 

அமானி முறை வரி​வி​திப்பு

  • புகை​யிலை வரு​வாய் மற்​றும் நிஜா​மின் சுங்க வரி​வி​திப்பு
  • புகை​யிலை வரு​வாய் மற்​றும் நிஜா​மின் சுங்​க​வரி விதி​வி​லக்கு

என்ற கட்​டு​ரை​க​ளை​யும்,

ஆங்​கி​லத்​தில்,​​

  • L‌i‌t‌e‌r​a​c‌y ‌i‌n Ma‌d‌r​a‌s ​(1822 – 1931)
  • P‌e‌r‌m‌i‌s‌s‌i‌o‌n C‌e‌r‌i‌t‌f‌i​c​a‌t‌e
  • T‌h‌e ‌e‌x​c‌l‌u‌d‌e‌d a‌n‌d ‌pa‌r‌t‌i​a‌l‌l‌y ‌e‌x​c‌l‌u‌d‌e‌d a‌r‌ea ‌fa​c‌t‌u​a‌l ‌m‌e‌m‌o‌r​a‌n‌d‌u‌m
  • T‌h‌e ‌n‌o‌t‌e‌s ‌o‌n R‌i‌p​a‌r‌i​a‌n ‌r‌i‌g‌h‌t‌s ‌i‌n Ma‌d‌r​a‌s
  • Ca‌n‌n​a‌n‌o‌r‌e F‌o‌r‌t a‌n‌d C‌o‌n‌t‌o‌n‌m‌e‌n‌t
  • I‌n‌t‌e‌r‌p‌r‌o‌v‌i‌n​c‌i​a‌l ‌o‌r ‌i‌n‌t‌e‌r ‌s‌t​a‌t‌e a‌g‌r‌e‌e‌m‌e‌n‌t ‌r‌e‌l​a‌t‌i‌n‌g ‌i‌n ‌t‌h‌e ‌u‌s‌e ‌o‌f ‌r‌i‌v‌e‌r ‌wa‌t‌e‌r‌s
  • Na‌t‌i‌o‌n​a‌l‌i‌s‌m ‌i‌n S‌o‌u‌t‌h I‌n‌d‌ia

ஆகிய கட்​டு​ரை​கள் அவற்​றுள் குறிப்​பி​டத்​தக்​க​வை​யா​கும்.​

 

ஆங்​கி​லேயர் ஆட்​சிக் காலத்​தில் 23 – 08 – 1934இல் சென்னை ஆவ​ணக் காப்​ப​கத்​தில் தம் பணி​யைத் தொடங்கி,​​ ஏறத்​தாழ 22 ஆண்​டு​கள் இயக்​கு​நர்  பொறுப்​பில் இருந்​துள்​ளார்.​

 

தாம் பணி​யாற்​றிய காலத்​தில் மிக​வும் திறம்​ப​டப் பணி​யாற்றி "ஆவ​ணக் காப்​ப​கத் தந்தை" என்ற பெயரை ஆவ​ணக் காப்​பி​யல் வர​லாற்​றில் பெற்​றார்.​

 

க​வி​தை​கள் புனை​வ​தி​லும் இவ​ருக்கு ஈடு​பாடு உண்டு.​ பளு தூக்​கு​வ​தி​லும் வல்​ல​வ​ராக இருந்​துள்​ளார்.​

 

ஏறத்​தாழ 8,000 வரை​ப​டங்​க​ளைப் பூகோள ரீதி​யாக அர​சி​யல் மற்​றும் கடல் வாணி​பம் தொடர்​பு​டை​ய​வற்​றைத் தொகுத்து அதற்கு விளக்​கங்​க​ளு​டன் கூடிய அட்​ட​வ​ணை​யை​யும் தயா​ரித்​தார்.​

 

தஞ்சை மாவட்ட ஆவ​ணங்​க​ளுக்​கான வழி​காட்​டியை ​(6 தொகு​தி​க​ளில்)​ வெளி​யிட்​டார்.​

 

டச்சு,​​ டேனிஸ் ஆவ​ணங்​க​ளுக்​கான அட்​ட​வ​ணை​யைத் தயா​ரித்து 1952இல் வெளி​யிட்​டார்.​

 

டி.வி.​ போத்​தார் உத​வி​யு​டன் புதுக்​கோட்டை சமஸ்​தா​னத்து மராட்​டிய ஆவண விவ​ரப் பட்​டி​ய​லை​யும் தயா​ரித்​தார்.​

 

சென்னை ஆவ​ணக் காப்​ப​கத்​தில் சேக​ரிக்​கப்​பட்​டுள்ள ஆவ​ணங்​க​ளின் பரா​ம​ரிப்​புக்​கா​கப் பல நட​வ​டிக்​கை​க​ளை​யும் எடுத்​துள்​ளார்.​

 

கொல்​கத்​தாவி​லி​ருந்து புது​தில்​லிக்கு இந்​திய அரசு ஆவ​ணங்​கள் கொண்டு செல்​லப்​பட்​டு தேசிய ஆவ​ணக் காப்​ப​க​மாக உரு​வா​கத் தொடங்​கிய காலத்​தில்,​​ மத்​திய அர​சால் இவர் அழைக்​கப்​பட்​டார்.​

 

ஆனால்,​​ சென்னை ஆவ​ணக் காப்​ப​கத்​தி​லேயே தம் பணி​களை மன​நி​றை​வு​டன் மேலும் செய்ய வேண்​டிய நிலை​யில், பதவி உயர்​வு​டன் கூடித் தம்மை நாடி​வந்த இப்பொறுப்பை பாலிகா ஏற்க மறுத்​து​விட்​டார்.​

 

இ​வ​ரு​டைய பணி​களை டாக்​டர் இரா​ஜேந்​திர பிர​சாத் 1955இல் பாராட்​டி​யுள்​ளார்.​

 

பண்​டித ஜவா​ஹர்​லால் நேரு,​​ மூத​றி​ஞர் இராஜாஜி,​​ மேதகு சங்​கர்​த​யாள் சர்மா போன்​ற​வர்​கள் இவர் ஆற்​றிய பணி​களை வெகு​வா​கப் பாராட்​டி​யுள்​ள​னர்.​

 

"……….அவரது முயற்​சி​யால் ​தான் இன்​றைக்கு மத​ராஸ் ரெக்​கார்டு ஆபீஸ் ஆசி​யா​வில் சிறந்த ஆவ​ணக் காப்​ப​கங்​க​ளில் ஒன்​றா​கத் திகழ்​கி​றது" என்று அந்​நா​ளைய இந்​தி​யக் கல்வி அமைச்​சர் டாக்​டர் கே.எல்.ஸ்ரீமாலி பாராட்​டி​யுள்​ளார்.​

 

"தென்​ன​கத்​தில் தேசிய விடு​த​லைப் போர்" என்ற தலைப்​பில் 1957இல் பாலிகா "இந்து" நாளி​த​ழில் கட்​டுரை ஒன்றை எழு​தி​யி​ருந்​தார்.​

 

இதைப் படித்த பேர​றி​ஞர் அண்ணா தமது ஹோம்​லாண்ட் இத​ழில்,​​ "T‌r‌u‌t‌h T‌r‌i‌u‌m‌p‌h​a‌n‌t" என்ற தலைப்​பில் பாலி​கா​வைச் சிறப்​பா​கப் பாராட்டி எழு​தி​னார்.​

 

இ​வர் ஆற்​றிய பணி​க​ளுள் ஒரு​சி​ல​வற்றை நினைவு கூர்​வது பொருந்​தும்.​

 

"காலத்தால் பழைய ஆவ​ணங்​கள் அழிய நேரி​டும் போது,​​ அவை​க​ளின் அச்​சுப் பிர​தி​க​ளில் பொதிந்​துள்ள பழைய நினை​வு​கள் அழி​யா​மல் பாது​காக்க வாய்ப்​பா​கும்" என்று குறிப்​பிட்டு 1938இல் 1755-1765ஆம் ஆண்​டுக்​கான ஆவ​ணங்​களை மறு​ப​திப்​பாக்கி வெளி​யிட வேண்​டு​மென்று அர​சுக்​குக் கருத்​து​ருக்​களை அனுப்​பி​னார்.​

 

ஆ​வ​ணக் காப்​பா​ளர் பாலிகா,​​ 13.2.1947 அன்று தஞ்சை மாவட்ட ஆட்​சி​யர் ஒத்​து​ழைப்​பு​டன் அர​சின் அனு​மதி பெற்று,​​ வர​லாற்​றுச் சிறப்​பு​மிக்க மோடி ஆவ​ணங்​க​ளைப் பார்​வை​யிட்டு 5.3.1947 அன்று அளித்த ஆய்​வ​றிக்​கை​யின் அடிப்​ப​டை​யில் சென்னை ஆவ​ணக் காப்​ப​கத்​தில் தஞ்சை அரசு மோடி ஆவ​ணங்​கள் சேக​ரித்​துப் பாது​காக்​கப்​பட்​டன.​

 

முன்​னாள் சட்​டப் பேர​வைத் தலை​வர் ஜெ.சிவ​சண்​மு​கம் பிள்ளை "மத​ராஸ் லோகல் ஷெல்ப் கவர்ன்​மெண்ட்" என்ற தலைப்​பில் எழு​திய ஆய்​வுக் கட்​டு​ரைக்​கான தக​வல்​கள் மற்​றும்

  • ச.வையா​பு​ரிப் பிள்ளை
  • கே.ஏ.நீல​கண்ட சாஸ்​தி​ரி​யார்
  • எஸ்.கே.ஐயங்​கார்
  • கே.ஆர்.சீனி​வா​சய்​யங்​கார்

போன்ற அறி​ஞர்​க​ளுக்கு ஆவ​ணக் காப்​ப​கத்தி​லி​ருந்து பல்​வேறு தக​வல்​க​ளை​யும் திரட்​டித் தந்​துள்​ளார் பாலிகா.​

 

பா​லி​கா​வால் எழு​தப்​பட்ட "S‌t‌u‌d‌i‌e‌s ‌i‌n Ma‌d‌r​a‌s A‌d‌m‌i‌n‌i‌s‌t‌r​a‌t‌i‌o‌n ​(2 ‌v‌o‌l‌u‌m‌e‌s)​ G‌ ​என்ற நூல் ஏறத்​தாழ 40 ஆய்​வுக் கட்​டு​ரை​கள் அடங்​கி​ய​தா​கும்.​அவ்​வப்​போது நூற்​றுக்​க​ணக்​கான மூல ஆவ​ணங்​க​ளைப் படித்​துப் பார்த்து அதன் சாறாக இக்​கட்​டு​ரை​களை எழு​தி​யுள்​ளார்.​இன்​றைக்கு வரை இவர் எழு​திய இக்​கட்​டு​ரை​கள் ஆய்​வா​ளர்​க​ளால் அரிய கரு​வூ​ல​மா​கப் போற்​றப்​பட்டு வரு​கின்​றன.​

 

இ​வ​ரது முயற்​சி​யால்,​​ சென்னை ஆவ​ணக் காப்​பக நூல​கத்​தில் சேக​ரிக்​கப்​பட்​டி​ருந்த நூல்​க​ளுக்​கான அட்​ட​வ​ணைப் பட்​டி​யல்,​​ புத்​தக வடி​வில் தயா​ரிக்​கப்​பட்​டது.​

 

இது பின்​னர் "பாலிகா கேட்​லாக் ஆப் புக்ஸ்" என்று அழைக்​கப்​பட்​டது.​

 

தேசி​யக்​கவி பார​தி​யா​ரின் கவிதை மூலங்​களை அறி​வி​யல் முறை​யில் பாது​காப்​பது தொடர்​பாக,​​ பாலி​கா​வின் அறி​வுரை அர​சால் பெறப்​பட்​டது குறிப்​பி​டத்​தக்​கது.​

 

மங்​க​ளூ​ரில் உள்ள சிறிய கிரா​மத்​தில் பிறந்து,​​ சென்​னை​யில் பணி​யாற்றி,​​ தமி​ழுக்​கும்,​​ தமிழ் நாட்​டுக்​கும் பெருமை தேடித்​தந்த பாலிகா,​​ 1958ஆம் ஆண்டு செப்​டம்​பர் 21ஆம் தேதி இவ்​வு​லக வாழ்வை நீத்​தார்.​

​வர​லாறு மற்​றும் தமி​ழி​யல் துறை சார்ந்த இளம் ஆய்​வா​ளர்​கள் இவ​ரது பணி​களை அறிந்து கொள்​வது மிக​வும் அவ​சி​யம்.​ ​​

 

நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment