Home Tamil MedicineHerbs இஞ்சி-சுக்கு – Ginger

இஞ்சி-சுக்கு – Ginger

by Dr.K.Subashini
0 comment

இஞ்சி-சுக்கு

திரு.அ.சுகுமாரன்

 

Oct 25, 2009

இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம்
இது   பெரிய புராணம் ஏயர்கோன்கலிக்காம நாயனார்  பகுதியில்வரும்
ஒரு பாடல .இது கூறுவது காஞ்சி கோட்டயைப்பற்றி தான் .

 

இதன் பொருள்  அந்நகரின் உட்புற மதில்களில், பகைவரைத் தாக்குவதற்கு என நாட்டப் பெற்ற எந்திரங்கள் நிரல்படச் சூழ்ந்து இருக்கும். மேகங்கள் வந்து படிந்து சூழ்ந்த வண்ணம் இருப்பன மலை என உயர்ந்த அழகிய மாடங்கள்.என்பதாகும்.

இஞ்சி – மதில். ஞாயில் – மதில் உறுப்பு.

இஞ்சி என்பது மதில் எனப் புரிகிறது .நம் உடம்பையும் அனைத்து வகை பிணியில் இருந்து அரணாக கோட்டை  மதில் போல் இருந்து காப்பதால் இதற்கும் இஞ்சி என பெயர் வந்ததா ?
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பது ஒரு பழைய பழமொழி ! இஞ்சி காய்ந்தால்  சுக்கு ஆகும்
 

இது பல மருத்துவப்பயன்களைக் கொண்டிருக்கிறது.  சுக்கு, மிளகு, திப்பிலி என்பது  ..திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். அதே போல் திரிகடுகம்  எனும் நூல்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்  சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது.

தமிழ் பெயர்  இஞ்சி  
ஆங்கில பெயர் Ginger
அறிவியல் பெயர் Zinziber officinale 
 

இதில் உள்ள சத்துக்கள் 100 கிராம் உண்பதில் உள்ளது
சக்தி (Energy) 67 கலோரிகள்
ஈரப்பதம்/நீர் (Moisture) 80.9 கிராம்
புரதம் (Protein) 2.3 கிராம்
கொழுப்பு (Fat) 0.9 கிராம்
தாதுக்கள் (Minerals) 1.2 கிராம்
நார்ச்சத்து (Fibre) 2.4 கிராம்
கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates) 12.3 கிராம்
கால்சியம் (Calcium) 20 மி.கி
பாஸ்பரஸ் (Phosporous) 60 மி.கி
இரும்பு (Iron) 3.5 மி.கி
மெக்னீஸியம் (Magnesium) 405 மி.கி
செம்பு (Copper) 0.74 மி.கி
மாங்கனீசு (Manganese) 5.56 மி.கி
ஸிங்க்/நாகம் (Zinc) 1.93 மி.கி
குரோமியம் (Chromium) 0.057 மி.கி
கரோட்டீன் (Carotene) 40 மை.கி
தையாமின் (Thiamine) 0.06 மி.கி
ரைப்போஃப்ளேவின் (Riboflavin) 0.03 மி.கி
நியாசின் (Niacin) 0.6 மி.கி
வைட்டமின் சி (Vitamin C) 6 மி.கி
Source: National Institute of Nutrition – Hyderabad

இது மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும் .வேரில் மஞ்சள் போலவே இருக்கும் .பொங்கலின் பொது இஞ்சி கொத்தும் மஞ்சள் கொத்தையுமே
புது பொங்கல் பானையில் கட்டுவார்கள்.  இது  பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.

இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மத்திய  நரம்பு மண்டலத்தைத் தூண்டி   இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
 மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும்  மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.

பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.

இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சியை நன்றாக சுடவேணும் அதை நசுக்கி  உடம்பில் தேக்க   பித்த, கப நோய்கள் தீரும்.
 

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
ஆக முன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு  கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
 

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக் கொள்வது,  இதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும் என்கிறது அந்தச் செய்தி.  பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாக தினமும் உண்டு வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி உணவாகக் கொள்பவர்களுக்கு, “பைப்ரினோலிடிக்” செயற் பாடுகுன்றி,   ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்படுவதாகவும்,   இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் செய்தி தெரிவிக்கிறது.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பை உண்டாகாமல் தடுத்தும், மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 

இஞ்சியையும் சுக்கையும் உபயோகிக்கும் போது சுத்தி செய்தல் மிக முக்கியமானது .இல்லை எனில்   மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்ப்படும்.

இஞ்சியை சுத்தி செய்ய அதன் மேல் தொலை நன்றாக நீக்க வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும் .அதே போல் சுக்கை சுத்தி செய்ய அதன் மேல் சுண்ணாம்பை
தடவிகாயவைது ,பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும் .இது மிக முக்கியமானது சுத்தி செய்யாமல் உபயோகிக்கவேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.

அது என்ன  இஞ்சி இடுப்பழகி என ஒரு குரல் கேட்கிறது. தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு குவளை  மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். சேர்த்த கொழுப்பையும் கரைக்கும். அதன்பிறகு எந்த வயதிலும் நீங்கள் இடுப்பழகியாகவே இருக்கலாம்.”

எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு கரண்டி  இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

இஞ்சி- சுக்கு மூன்று தொச்த்த்யும் போக்கும் ஆற்றல் படைத்த ஒரு சர்வ ரோக நிவாரிணி .

You may also like

Leave a Comment