காலை ஏறக்குறைய 10 மணி இருக்கும் நாங்கள் அங்கு சென்ற போது. ஒரு அதிகாரி ஒருவரும் ஒரு சில பார்வையாளர்களும் இந்த இல்லத்தில் இருந்தனர்.
பாரதியார் பிறந்த இல்லம்
பாரதியார் குடும்பப் படம். (புதுவை 1917)
பாரதியாரின் பத்திரிகை இந்தியா (1907)
பாரதி பிரசுராலய நிறுவனர்களில் ஒருவரான பாரதியின் இளைய மாப்பிள்ளை நடராசன்.
செல்லம்மாள் பாரதியின் "பாரதியார் சரித்திரம்" நூலைப் பற்றி..
பாரதி குடும்பத்தினர் படம்: சகோதரர் விஸ்வநாதய்யர், பேத்தி, புதல்வி ஸ்ரீமதி சகுந்தலை, பேரன், புதல்வி ஸ்ரீமதி தங்கம்மாள் பாரதி, பேத்தி
பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட ரா.கனகலிங்கம்
சென்னையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீட்டின் பழைய தோற்றம்.
தனிமை இரக்கம் பாடலை (1904) அச்சில் முலாவதாக வெளியிட்ட விவேகபானு மு.ரா.கந்தசாமி கவிராயர்.
காரைக்குடியில் பாரதியார் (1919)
பாரதியாரின் துணைவியார் செல்லம்மா
ஸ்வதேச கீதங்கள் (1907) சிறு நூலை வெளியிட்ட வி.கிருஷ்ணசாமி ஐயர்
சென்னையில் மகாகவி பாரதியார் (1920)
வாழ்க்கைக் குறிப்பு
திறப்பு விழா
பாரதியார் விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள்.
காந்தியடிகளின் வாழ்த்து
பாரதியார் கையெழுத்து
பாரதியார் இந்தத் தெருவில் தான் பிறந்து வளர்ந்திருக்கின்றார் என்பது உறுதி. பாரதியின் தாய் மாமன் திரு.சாம்பசிவம் ஐயர் பாரதி இங்கிருந்து சென்ற பிறகும் இந்த இல்லத்தில் இருந்திருக்கின்றார். அவருடைய உறவினர்கள் சிலர் கல்கத்தாவில் இருந்திருக்கின்றனர். அவர்கள் இந்த இல்லத்தைச் சில காலம் வேறொருவருக்கு வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். திரு.கருணாகர பாண்டியனின் அண்ணன் திரு.துரைராஜ் ஆசிரியர் எட்டயபுரத்தில் தமிழாசிரியராகவும் கல்லூரி ஆசிரியராகவும் இருந்தவர்.
அவர் சாம்பசிவ ஐயரின் உறவினர்களை அணுகி இந்த இல்லத்தை வாங்கியிருக்கின்றார். வாங்கியவுடன் அந்த இல்லத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். 1973 வரை இந்த இல்லம் பலர் வந்து நூல்களை வாசித்து செல்லும் நூலகமாக இருந்துள்ளது. 1973ல் இன்றைய தமிழ்க முதல்வர்.திரு.கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இந்த இல்லத்தை பாரதி நினைவு இல்லமாக பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போது இந்த இல்லத்தை அரசாங்கத்திடம் இக்கட்டிடத்திற்கானப் பணத்தை பெற்றுக் கொண்டு திரு.துரைராஜ் ஆசிரியர் குடும்பத்தினர் ஒப்படைத்து விட்டனர்.
இன்று இந்த இல்லம் தமிழக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டு தினமும் ஒரு சிலர் வந்து பார்த்துச் செல்லும் வகையில் பாதுகாக்கப்படுகின்றது.
திரு.கருணாகர பாண்டியன் இச்செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒலிப்பதிவினை கேட்க :
அன்புடன்
சுபா