Home Tamilmanigal பேரா​சி​ரி​யர் மா. இளை​ய​பெ​ரு​மாள்

பேரா​சி​ரி​யர் மா. இளை​ய​பெ​ரு​மாள்

by Dr.K.Subashini
0 comment

 

பேரா​சி​ரி​யர் மா. இளை​ய​பெ​ரு​மாள்

முனை​வர். சு.அழ​கே​சன்


 

கேர​ளத்தி​லி​ருந்து தமி​ழுக்​குத் தொண்டு செய்​தோர் பலர். படைப்​பு​கள் வழி​யும்,​ ஆய்​வு​கள் வழி​யும் தமி​ழுக்​குப் பெரி​தும் பங்​காற்​றி​ய​வர்​க​ளுள் பேரா​சி​ரி​யர் மா.இளை​ய​பெ​ரு​மா​ளும் ஒரு​வர்.

 

  • நீல.பத்​ம​நா​பன்,
  • ஆ.மாத​வன்
  • நகு​லன்

என்ற படைப்​பா​ளர்​கள் வரி​சை​யி​லும்,​

  • பேரா​சி​ரி​யர் வையா​பு​ரிப் ​பிள்ளை
  • பேரா.வ.அய்.சுப்​பி​ர​ம​ணி​யம்

போன்ற அறி​ஞர்​கள் வரி​சை​யி​லும் வைத்து எண்​ணத்​தக்​க​வர் மா.இளை​ய​பெ​ரு​மாள்.

 

 

ஏ​றத்​தாழ 30 ஆண்​டு​கள் ​(1954 முதல் 1984 வரை)​ கேர​ளப் பல்​க​லைக்​க​ழ​கத்​தில் தமிழ்த்​து​றைப் பேரா​சி​ரி​ய​ரா​கப் பணி​யாற்றி,​ தமி​ழுக்​கும் – மலை​யா​ளத்​துக்​கும் அரும்​பணி ஆற்​றி​ய​வர்.

 

குமரி மாவட்​டத்​தில்,​ தாழக்​குடி என்​னும் சிற்​றூ​ரில் 1924ஆம் ஆண்டு பிப்​ர​வரி 29ஆம் தேதி,​ இ.மாணிக்​க​வா​ச​கம் பிள்ளை – மாரி​யம்​மாள் தம்​ப​திக்​குப் பிறந்​தார்.

 

"எமக்​குத் தொழில் எழுத்து;​ இமைப்​பொ​ழு​தும் சோரா​தி​ருத்​தல்"என்ற இலட்​சிய வேட்​கை​யோடு பணி​யில் ஈடு​பட்டு,​ தனது புகழை நிலை​நி​றுத்​தி​ய​வர். தனது அரிய முயற்​சி​யால் பி.எச்டி. பட்​டம் பெற்​ற​வர்.

 

"இற​வாத புது தமிழ் நூல்​கள் தமிழ் மொழி​யில் இயற்​றல் வேண்​டும்" என்ற கொள்​கை​வழி வாழ்ந்​த​வர்.​​

 

"செந்​த​மிழ் நூற்​க​ளில் சிந்​த​னைச் செல்​வம் சேர்ந்து பெரு​கு​தல் எனக்​கின்​பம்" எ​னக் கவிதை முழக்​கம் செய்த இவர்,​

  • படைப்பு
  • ஆய்வு
  • மொழி​பெ​யர்ப்பு
  • இலக்​க​ணம்

முத​லிய பல்​வேறு நிலை​க​ளில் பணி​யாற்​றி​யுள்​ளார்.

 

இவ​ரது புல​மையை வெளிச்​சப்​ப​டுத்​து​வ​தாக 13 நூல்​க​ளும் சுமார் 25 கட்​டு​ரை​க​ளும் காணக்​கி​டைக்​கின்​றன. ப​டைப்​பி​லக்​கி​யத் துறை​யில்,​ குறிப்​பா​கக் கவி​தைத் துறை​யில் இற​வாத புகழ் பெற்று விளங்​கு​ப​வர். சிறந்த கவி​ஞ​ரான பேரா​சி​ரி​யர்,​ சுமார் 150 கவி​தை​க​ளுக்​கும் மேலாக,​ தனிக் கவி​தை​களை இயற்​றி​யுள்​ளார். இக்கவி​தை​க​ளுள் பெரும்​பா​லா​னவை புதுக்​க​வி​தை​க​ளே​யா​கும். புதுக்​க​வி​தை​கள் வளர்ச்​சி​யு​றாத காலத்​தி​லேயே,​ "புதுக்​க​வி​தை​க​ளும் கவி​தை​களே" என்ற கொள்​கை​யில் வழு​வற நின்று,​ இவர் பல புதுக்​க​வி​தை​கள் எழு​திப் புகழ் பெற்​றார்.

 

இவை,​ "புதுக்​கு​ரல்​கள்" என்ற நூலி​லும்,​ பல இலக்​கி​ய​வட்​டம்,​ எழுத்து,​ கலை​ம​கள்,​ கன்​னி​யா​கு​மரி, வஞ்​சி​நாடு போன்ற இதழ்​க​ளி​லும் வெளி​வந்​துள்​ளன. இவ​ரது 40 கவி​தை​க​ளின் தொகுப்​பாக "வாழ்க்கை வண்​ணம்" என்ற கவி​தைத் தொகுப்பு வெளி​வந்​துள்​ளது.

 

அச்​சில் ஏறாத இவ​ரது "இராம சரி​த​மும்", "கலிங்​கப் போர்" என்ற கவிதை நாட​க​மும் நம்​மைப் பிர​மிக்க வைக்​கும். கவி​தை​க​ளி​லும் கூடத் தமது இலக்​க​ணச் சிந்​த​னை​களை வெளி​யிட்டு இன்​பம் கண்​ட​வர். "சங்கிலி" என்ற தலைப்​பில் அமை​யும் கவி​தை​யும் இவ்​வ​கை​யதே.

 

பே​ரா​சி​ரி​ய​ரின் இலக்​கண,​ மொழி​பெ​யர்ப்​புப் பணி பெரி​தும் சுட்​டத் தகுந்​தது. "சென்​றி​டு​வீர் எட்​டுத் திக்​கும்;​ கலைச் செல்​வங்​கள் யாவும் கொணர்ந்​திங்கு சேர்ப்​பீர்" என்ற விழு​மிய எண்​ணத்​தால் தமிழ் – மலை​யாள மொழி​க​ளின் இலக்​கண நூல்​களை மொழி​பெ​யர்த்து,​ இரு மொழி​க​ளுக்​கும் சேவை செய்​துள்​ளார்.

 

1953ஆம் ஆண்டு நவம்​பர் 26ஆம் தேதி சொர்​ணம்​மாள் என்​ப​வரை வாழ்க்​கைத் துணை​யாக ஏற்​றார். இவ​ருக்கு இரண்டு மகன்​க​ளும், இரண்டு மகள்​க​ளும் உள்​ள​னர்.

 

த​மிழி​லி​ருந்து தொல்​காப்​பி​யம் ​(1961), நன்​னூல் ​(1967), வீர​சோ​ழி​யம் ​(1967), நேமி​நா​தம் ​(1984) ஆகிய தமிழ் இலக்​கண நூல்​களை மலை​யா​ளத்​தி​லும், மலை​யாள மொழியி​லி​ருந்து லீலா தில​கம் ​(1971), கேரள பாணி​னீ​யம் ​(1977), டாக்​டர் ஹெர்​மன் குண்​டர்ட் எழு​திய மலை​யாள மொழி இலக்​க​ணம் ​(1979), சொற்​றொ​டர்க் காண்​டம் ஆகிய நூல்​களை மலை​யா​ளத்தி​லி​ருந்து தமி​ழி​லும் மொழி​பெ​யர்த்து அரும்​ப​ணி​யாற்​றி​ய​வர்.

 

இம்மொழி​பெ​யர்ப்பு நூல்​கள் இவ​ரது இரு மொழிப்​பு​ல​மை​யைப் பறை​சாற்​று​வ​தாக அமை​கின்​றன. இம்மொழி​பெ​யர்ப்பு நூல்​க​ளில் இடம்​பெற்​றுள்ள முன்​னு​ரை​கள்,​ இவ​ரது புல​மை​யாற்​றலை,​ ஆழந்த இலக்​க​ணப் புல​மையை வெளிச்​ச​மி​டு​கின்​றன.

 

இ​லக்​கண நூல்​கள் மட்​டு​மன்றி,​ "வள்​ளத்​தோள்" ​(1979) என்ற நூலை ஆங்​கி​லத்​தில் இருந்து தமி​ழில் மொழி​பெ​யர்த்​துள்​ளார். தமிழ் இலக்​க​ணத் துறை​யில் இவர் செய்த ஆய்​வு​கள் இவரை,​ இலக்​க​ணப் பேரா​ச​னாக உல​குக்கு அடை​யா​ளப்​ப​டுத்​தின. பொது​வாக இலக்​கண விதி​களை நிறுவ,​ சங்க இலக்​கி​யச் சான்​று​கள்,​ உரை​கா​ரர்​க​ளின் மேற்​கோள்​கள்,​ மலை​யாள இலக்​கண நூல்​க​ளின் கருத்​து​கள் போன்​றன கொண்டு நிறு​வு​தல் இவ​ருக்​குக் கைவந்த இலக்​க​ணக் கலை​யா​கும்.

 

இ​வ​ரது "சங்க இலக்​கி​யம் குறித்த இலக்​கண ஆய்வே" இவ​ருக்கு முனை​வர் பட்​டத்​தைப் பெற்​றுத்​தந்​த​தோடு,​ இன்​று​வரை பேசப்​ப​டு​கிற மிகச் சிறந்த இலக்​கண ஆய்​வே​டு​க​ளுள் ஒன்​றா​க​வும் திகழ்​கி​றது. மேலும் இவ​ரது "தமிழ்​மொ​ழிச் சிந்​த​னை​கள்" ​(1964) என்ற நூலும் இவ​ரது ​ இலக்​க​ணப் புலமை சார்ந்த சிறந்த ஆய்வு நூல்​க​ளா​கும். சங்க இலக்​கி​யங்​க​ளுக்​குச் சொல்​ல​டை​வு​கள் தயா​ரித்​த​து​ தான் இவ​ரது சிறந்த பணி​யா​கும். இவ்​வ​கை​யில்,​ அவர் சங்க இலக்​கி​யங்​கள் முழு​மைக்​கும் சொல்​ல​டை​வு​கள் தயா​ரித்​துள்​ளார். சங்க இலக்​கி​யங்​க​ளின் சொற்​களை ஈறு​கள் அடிப்​ப​டை​யில்,​ அடி​க​ளின் அடிப்​ப​டை​யில்,​ தொகை​க​ளின் அடிப்​ப​டை​யில் எனப் பல​வ​கை​க​ளில் சொல்​ல​டை​வு​கள் தயா​ரித்​துள்​ளார். அவை இன்​று​வரை அச்​சில் ஏற​வில்லை என்​ப​தும் கவ​னிக்​கத்​தக்​கது. கு​றிப்​பாக ஸ்ரீத​ர​ மே​ன​னின் ஆங்​கில நூலான,​ A Survey of Kerala History​ என்ற நூலைத் தமி​ழில் "கேரள சரித்​தி​ரம்" என்ற நூலா​க​வும்,​ "கலிங்​கப் போர்" என்ற கவிதை நாட​கம்,​ "எது இன்​பம்?​" என்ற கவி​தைத் தொடர்,​ "இராம சரி​தம்" ​(மலை​யாள இராம​ச​ரி​தத்​தைத் தமிழ் வரி வடி​வில் கூறு​வது)​ போன்ற நூல்​கள்,​ மலை​யா​ளக் கவி​தை​க​ளைத் தமி​ழி​லும், தமிழ் மொழிக் கவி​தை​கள் பல​வற்றை மலை​யா​ளத்​தி​லும் மொழி​பெ​யர்த்​தவை இன்​று​வரை அச்​சில் ஏறா​தது பெரி​தும் கருத்​தில் கொள்​ளத்​தக்​கது.

 

வாழ்​நாள் முழு​வ​தும் தமிழ் இலக்​க​ணம் படித்​தல்,​ கற்​பித்​தல்,​ ஆய்வு செய்​தல்,​ மொழி​பெ​யர்த்​தல் என வாழ்ந்து,​ இலக்​க​ணத் துறை​யில் பல​ருக்​கும் வழி​காட்​டி​யா​க​வும்,​ நல்​லா​சி​ரி​ய​ரா​க​வும் வாழ்​வாங்கு வாழ்ந்​த​வர் பேரா​சி​ரி​யர் இளை​ய​பெ​ரு​மாள். இவ​ரது அரும்​ப​ணி​யைப் பாராட்டி,​ தமி​ழ​கப் புல​வர் குழு இவ​ருக்​குத் "தமிழ்ச் சான்​றோர்" விருது அளித்து கெளர​வித்​தது குறிப்​பி​டத்​தக்​கது.

 

1984ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி இளை​ய​பெ​ரு​மாள்,​ மண்​ணு​லக வாழ்வை நீத்​தார்.

 

இவ​ரது படைப்​பு​கள் என்​றென்​றும் நினைக்​கத்​தக்​கவை;​ போற்​றத்​தக்​கவை;​ ஏற்​கத்​தக்​கவை;​ அவ​ரது சமூ​கம் சார்ந்த படைப்​பு​கள் என்​றென்​றும் அவரை நினைக்​கச் செய்​யும்;​ நிலைத்து நிற்​கும்.

 

நன்றி:- தினமணி

You may also like

Leave a Comment