Home Tamilmanigal ஆ.சிங்​கா​ர​வேலு முத​லி​யார்

ஆ.சிங்​கா​ர​வேலு முத​லி​யார்

by Dr.K.Subashini
0 comment

"அபி​தான சிந்​தா​மணி" புகழ் ஆ.சிங்​கா​ர​வேலு முத​லி​யார்

புல​வர் பா. அன்​ப​ரசு


 

தமி​ழில் "அபி​தான சிந்​தா​மணி" என்​னும் பெய​ரில் ஒரு நூல் உள்​ளது. இதைப்​பற்றி அறிந்​துள்ள தமிழ் ஆர்​வ​லர்​கள் மிகச் சிலரே. இந்நூ​லின் பெய​ரைக் கேள்​விப்​ப​டும் சிலர்,​ "அபி​தான சிந்​தா​மணி" என்று ஒரு நூல் உள்​ள​தாமே,​ அதைக் கொடுங்​கள் படித்​து​விட்​டுத் தரு​கி​றேன் என்று கேட்​கி​றார்​கள்.

 

  • சீவக சிந்​தா​மணி,
  • விவேக சிந்​தா​மணி

என்​பது போல,​ அபி​தான சிந்​தா​மணி எளி​தில் படிக்​கக் கூடிய புரா​ணக்​க​தையோ அல்​லது இதி​காச நூலோ அல்ல. பல துறை​க​ளைச் சேர்ந்த சொற்​க​ளுக்கு விளக்​கம் கூறி விளங்​கச் செய்​யும் கலைக் களஞ்​சி​யம் ​தான் "அபி​தான சிந்​தா​மணி".

 

அபி​தான சிந்​தா​மணி என்​னும் இந்நூ​லின் ஆசி​ரி​யர் ஆ.சிங்​கா​ர​வேலு முத​லி​யார்.

 

இவர் பிறந்த ஊர் பொன்​வி​ளைந்​த​க​ளத்​தூ​ருக்கு அரு​கில் உள்ள ஆலூர். பிறந்த ஆண்டு 1855. இவர் பிறந்த தேதி,​ மாதம்,​ தாய் -​ தந்தை பற்​றிய விவ​ரங்​கள் அறி​யக் கிடைக்​க​வில்லை. இந்நூ​லின் முதல்​ப​திப்பு வெளி​யான 1910ஆம் ஆண்​டில் சிங்​கா​ர​வேலு முத​லி​யார் சென்னை -​ பச்​சை​யப்​பன் கல்​லூ​ரி​யில் தமி​ழா​சி​ரி​ய​ரா​கப் பணி​யாற்றி வந்​துள்​ளார்.

 

1,050 பக்​கங்​கள் கொண்ட இந்​நூல்​தான் தமிழ் மொழி​யில் வெளி​யான முதல் கலைக்களஞ்​சி​யம். பாண்​டித்​து​ரைத் தேவர் முயற்​சி​யால் மதுரை தமிழ்ச்​சங்​கம் வெளி​யிட்​டது.

 

சிங்​கா​ர​வேலு முத​லி​யார் இந்​நூ​லுக்கு "சர்​வார்த்த சித்தி" என்​னும் பெயரை வைத்​தி​ருந்​தார். இந்​நூல் கையெ​ழுத்​துப் பிர​தி​யாக இருந்​த​போது இதற்கு ஓர் அறி​முக உரையை யாழ்ப்​பா​ணம் கன​க​சபை பிள்ளை எழு​தித்​தந்​துள்​ளார். இவர் எழு​திய அறி​முக உரை​யில் இருந்​து​தான் இந்நூ​லின் பழைய பெயர் தெரி​ய​ வ​ரு​கி​றது.

 

சொல்​லப்​ப​டும் பொருள் எது​வாக இருந்​தா​லும் அதைக் கவிதை வடி​வில் மட்​டுமே எழு​தி​வ​ரும் வழக்​கம் தொடக்​கம் முதலே இருந்து வந்​தது. அருஞ்​சொற்​க​ளுக்​குப் பொருள்​கூற வேண்​டிய தேவை பிற்​கா​லத்​தில்​ தான் எழுந்​தது. அந்த அமைப்​பில் உரு​வா​ன​து​தான் அபி​தான சிந்​தா​மணி. நூல் உரு​வான வர​லாற்​றைப் பற்றி நூலா​சி​ரி​யர் சிங்​கா​ர​வேலு முத​லி​யார் தமது முதற் பதிப்பு முன்​னு​ரை​யில் இவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்.

 

"நான் இந்த அபி​தான சிந்​தா​மணி என்​னும் இந்​நூ​லைச் சற்​றே​றக் குறைய 1890ஆம் வரு​ஷங்​க​ளுக்கு முன் தொடங்​கி​னேன். இது எனது அரிய நண்​ப​ரும் சென்னை பச்​சை​யப்​பன் முத​லி​யார் ஹைஸ்​கூல் எட்​மாஸ்​ட​ரு​மா​கிய மகாஸ்ரீ சி.கோபா​ல​ரா​ய​ர​வர்​கள்,​ பி.ஏ., என​மண்​ட​ரம் வெங்​க​ட​ரா​மை​ய​ர​வர்​கள் செய்த "புராண நாம சந்​தி​ரிகை" போல்,​ தமி​ழில் ஒன்று ​ இயற்​றின் நல​மாம் என்று அந்​தப் புத்​த​க​மும் ஒன்று கொடுத்​து​தவ,​ அதனை முதல் நூலா​கக் கொண்டு "புராண நாமா​வளி" என்று பெயர் புனைந்து எழு​தத் தொடங்​கி​யது".

 

இந்​நூலை எழு​தி​வ​ரும்​போது சிலர் வாயி​லா​கக் கேட்ட தக​வல்​கள் மறந்​து​வி​டா​மல் இருப்​ப​தற்​கா​கத் தமது கைப்​புத்​த​கத்​தில் குறித்​துக்கொள்​வா​ராம் ஆசி​ரி​யர். பின்​னர் அதை எழு​தும் புத்​த​கத்​தில் பதித்​துக்​கொண்டு,​ அவற்​றைச் சில ​நாள்​கள் கழித்து அகர வரி​சைப்​ப​டுத்தி மீண்​டும் பெயர்த்து எழு​தி​யுள்​ளார். நூலை அச்​சில் கொண்​டு​வர பல்​வேறு தடை​கள் ஏற்​பட்​டன சிங்​கா​ர​வேலு முத​லி​யா​ருக்கு. சொந்​த​மாக வெளி​யிட எண்​ண​மும், ஆர்​வ​மும் இருந்த போதி​லும் அவ​ரது ஆசி​ரி​யப் பணி மூலம் குறை​வான வரு​மா​னமே கிடைத்​தது. ஆகவே தமிழ் -​ பருவ இதழ்​க​ளில் எதி​லா​வது வெளி​யிட நினைத்து ஓர் அறிக்கை தயா​ரித்து வெளி​யிட்​டார்.

 

இ​தழ் உரி​மை​யா​ளர்​களோ பல கார​ணங்​க​ளைக் கூறித் தட்​டிக்​க​ழித்​த​னர். கா​லம் கடந்து சென்​றது. இதைப் பயன்​ப​டுத்​திக்​கொண்டு வேறு சிலர் இதே போன்ற வேறு நூல்​களை எழு​தத் தொடங்​கி​னார்​கள். மீண்​டும் அவர் மற்​றொரு அறிக்​கை​யைத் தயா​ரித்து இதழ்​க​ளின் மூலம் வெளிப்​ப​டுத்​தி​னார். இவ​ரது அறிக்​கை​க​ளைப் பற்றி அறி​யும் போது மகா​கவி பார​தி​யார்,​ தமது நூல்​களை அச்​சில் கொண்​டு​வர மக்​க​ளி​டம் நிதி​யு​தவி வேண்டி அறிக்கை வெளி​யிட்ட கதை​தான் நினைவு வரு​கி​றது.கா​லம் கனிந்​தது.அபி​தான சிந்​தா​ம​ணியை வெளி​யி​டும் பொருள் வச​தி​யும் ஈர நெஞ்​ச​மும் கொண்ட மனி​தர் யாரா​வது தமி​ழ​கத்​தில் இல்​லா​மலா போய்​வி​டு​வார்​கள்?​ இருக்​கத்​தான் செய்​தார்.

 

அவர்​தான் மது​ரைத் தமிழ்ச் சங்​கத்​துத் தலை​வ​ரும், பால​வ​னத்​தம் ஜமீன்​தா​ரும்,​ தமிழ் வளர்த்த பெரு​ம​கன் பொன்​னு​சா​மித்​தே​வ​ரின் குமா​ர​ரும் ஆகிய பொ.பாண்​டித்​து​ரை​சா​மித் தேவர் என்​ப​வர். இவர்,​ சிங்​கா​ர​வேலு முத​லி​யார் வெளி​யிட்ட அறிக்​கை​யைப் பார்த்து,​ தாமே சென்​னைக்கு வருகை தந்து அபி​தான சிந்​தா​மணி நூலின் கையெ​ழுத்​துப் படி​யைக் கண்டு பெரு​ம​கிழ்ச்சி அடைந்​தார். கை​யெ​ழுத்​துப் படியை மது​ரைக்கு எடுத்​துச்​சென்ற பாண்​டித்​து​ரை​சா​மித் தேவர்,​ பல தமி​ழ​றி​ஞர்​க​ளைக் கொண்டு அதைச் சுத்​த​மாக எழு​து​வித்​துப் புதுப்​பி​ரதி தயா​ரித்​தார். அதை எடுத்​துக்​கொண்டு மீண்​டும் சென்​னைக்கு வந்து நூலா​சி​ரி​யரை உடன் வைத்​துக்​கொண்டு அச்​ச​கத்​தில் கொடுத்து அச்​சுப்​பணி தொடங்க ஆணை​யிட்​டார். அவ்​வப்​போது அச்​சுப்​ப​ணிக்கு வேண்​டிய பொரு​ளு​த​வி​யும் செய்​து​வந்​தார்.

 

சிங்​கா​ர​வேலு முத​லி​யார் இந்நூ​லின் முதல் பதிப்பு முக​வு​ரை​யில் இவ்​வாறு குறிப்​பிட்​டுள்​ளார்.

 

"இந்​நூல் ஒரு தனி நூல் அன்று. இது பல சான்​றோர்​கள் இயற்​றிய நூல்​க​ளின் தொகுப்​பா​கும்". – இதி​லி​ருந்து அவ​ரது பணி​வும்,​ அவை​ய​டக்​க​மும் வெளிப்​ப​டு​கின்​றன.

 

சிங்​கா​ர​வேலு முத​லி​யார் தமது நூலுக்​குத் தமி​ழில் முக​வுரை எழு​தி​ய​து​டன் அதன் சுருக்​கத்தை ஆங்​கி​லத்​தி​லும் எழு​திச் சேர்த்​துள்​ளார். அது தமி​ழ​றி​யா​த​வர்​கள் அறிந்​து​கொள்ள வழி​வ​குத்​தது. மு​க​வு​ரை​யின் தொடக்​கத்​தி​லும்,​ நூலின் தொடக்​கத்​தி​லும் அவர் எழுதி அமைத்​துள்ள அக​வற்​பா​வும்,​ கட்​ட​ளைத்​து​றை​யும் மர​புக் கவிதை புனை​யும் அவ​ரது ஆற்​ற​லுக்கு எடுத்​துக்​காட்​டாக விளங்​கு​கின்​றன. அ​பி​தான சிந்​தா​மணி,​ தமி​ழில் ​ வெளி​வந்த அக​ரா​தி​க​ளின் முன்​னோடி என​லாம். சொல்​லுக்​குச் சொல் பொருள் மட்​டும் கூறா​மல் சொற்​க​ளுக்கு உரிய விரி​வான விளக்​கங்​க​ளை​யும் கூறு​கி​றது. அகர வரி​சை​யில் அமைந்த இந்​நூல்,​ அகத்​திய முனி​வர் என்​னும் சொல்​லு​டன் தொடங்கி,​ வெளவால் என்​னும் சொல்​லில் முடி​கி​றது.

 

நூ​லின் பிற்​ப​கு​தி​யில்,

  • சிவத்​த​லங்​கள்
  • திரு​மால் தலங்​கள்
  • தேவார வைப்​புத் தலங்​கள்
  • அறு​பத்​து​மூ​வர் திரு​நட்​சத்​தி​ரம்
  • ஆழ்​வார்​க​ளின் திரு​நட்​சத்​தி​ரம்

முத​லிய பட்​டி​யல் இடம்​பெற்​றுள்​ளன.

 

அதன் பிறகு "அநு​பந்​தம்" என்​னும் பகு​தி​யில் நூலில் விட்​டுப்​போன சொற்​கள் அகர வரி​சைப்​ப​டுத்​தப்​பட்டு அவற்​றின் பொரு​ளும் தரப்​பட்​டுள்​ளன.

 

முதல் பதிப்பு வெளி​யான பிற​கு​தான் அதில் பல சொற்​கள் விடு​பட்​டுப்​போ​னது நூலா​சி​ரி​ய​ருக்​குத் தெரி​ய​வந்​தது. ஆகவே விடு​பட்​டுப்​போன சொற்​க​ளை​யும் மேலும் பல புதிய சொற்​க​ளை​யும் அவர் தொகுத்து வந்​தார். இவற்​றை​யெல்​லாம் சேர்த்து அபி​தான சிந்​தா​ம​ணியை இரண்​டாம் பதிப்​பாக வெளி​யி​டும் திட்​டத்​து​டன் அச்​சுக்​குத்
தந்​த​துள்​ளார். அச்​ச​கத்​தில் இருந்து வந்த அச்​சுத்​தாள்​க​ளில் 1,000 பக்​கங்​களை சிங்​கா​ர​வேலு முத​லி​யாரே பிழை திருத்​தம் செய்து வந்​தார்.

 

 

ஆனால், 1931ஆம் ஆண்டு நவம்​பர் மாதம் நோய்​வாய்ப்​பட்டு அவர் இயற்கை எய்​தி​னார். அத​னால்,​ தந்​தை​யா​ரின் எண்​ணத்தை நிறை​வேற்​றும் ஆவல் கொண்ட அவ​ரது மகன் சிவப்​பி​ர​காச முத​லி​யார் தொடர்ந்து அந்த அச்​சுப் பணி​களை மேற்​கொண்​டார். மு​தல் பதிப்​பில் 1,050 பக்​கங்​கள் கொண்ட இந்​நூல்,​ இரண்​டாம் பதிப்​பில் 1,634
பக்​கங்​க​ளு​டன் வெளி​யி​டப்​பட்​டது.

 

1855ஆம் ஆண்டு பிறந்து 1931ஆம் ஆண்டு இயற்கை எய்​திய சிங்​கா​ர​வேலு முத​லி​யார்,​ தாம் வாழ்ந்த 76 ஆண்​டு​க​ளில் செயற்​க​ரிய இச்​செ​ய​லைச் செய்து தமிழ் இலக்​கிய உல​கில் மங்​காத புகழ் பெற்​றுள்​ளார்.

 

 

You may also like

Leave a Comment