தூத்துக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ளது வ.உ.சி. கல்லூரி. இந்தக் கல்லூரியின் ஜியாலஜி துறை ஆய்வாளர்-விரிவுரையாளர் டாக்டர்.உதயனப் பிள்ளை அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக தூத்துக்குடி ராமேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள தீவுகள், பவளப் பாறைகள், முத்துக்குளித்துறை தொடர்பான பல விஷயங்களைப் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். பேட்டிகள் 4 பகுதிகளாக உள்ளன.
பேட்டி பதிவுகள்:11.3.2011
ஒலிப்பதிவும் படங்களும்: முனைவர்.க.சுபாஷிணி
ஏற்பாடு உதவி: திரு.துரை.ந.உ.
பதிவு 1 – {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thuthukudi/geologydept1.mp3{/play}
அரியலூர் மற்றும் ஏனைய இடங்களில் சேகரிக்கப்பட்டனவற்றின் புகைப்படங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
கல்லாக மாறிய மரம்
பதிவு 2 – {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thuthukudi/geologydept2.mp3{/play}
மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடியிலிருந்து ராமநாதபுரம் வரையில் 21 தீவுகள் உள்ளன. இத்தீவுகள் சூழ்ந்துள்ள கடல்பகுதிகளில் பவளப்பாறைகள் அதிகம் உள்ளன.
மன்னார் வளைகுடாவில் இருக்கின்ற பவளப்பாறைகள்
13 கோடி வருஷத்திற்கு முற்பட்ட ஒரு ஆமையின் உடல்பகுதி.
அக்னிப்பாறை
600 மில்லியன் வருஷங்களுக்கு முற்பட்ட படிவுப்பாறை. நீரின் ஓட்டம் பதியப்பட்ட வகையில் காணப்படுவது.
மேலும் வ.உ.சி கல்லூரி கடலாய்வுத்துறையினர் செய்கின்ற ஆய்வுகள், திருச்செந்தூர் பகுதியில் நடைபெறும் சங்கு குளித்தல் வணிகம் பற்றிய செய்திகளும் இடம்பெருகின்றன.
பதிவு 3 – {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thuthukudi/geologydept3.mp3{/play}
இப்பதிவில், முத்துக் குளித்துறை அழிந்து வரும் நிலை பற்றிய சில காரணங்களை விளக்குகின்றார் டாக்டர்.உதயனப்பிள்ளை.
பதிவு 4 – {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thuthukudi/geologydept4.mp3{/play}
மேலும் சில பொதுவான விஷயங்கள், குடி நீரில் உள்ள உலோகங்கள். மக்களின் அக்கறையின்மையால் மறைந்த தீவு பற்றிய செய்திகள் என இப்பதிவு அமைகின்றது.
டாக்டர்.உதயன்ப்பிள்ளையுடன் துரை ந.உ.